திரைப்படம் : மௌன ராகம்
பாடல் : பனி விழும் இரவு
இசை : இளையராஜா






ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா...வா...வா.....

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது


~~@@~~ பின்னிசை ~~@@~~ 


பெண் :
பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

ஆண் :
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

பெண் :
மாலை விளக்கேற்றும் நேரம் மனதில் ஒருகோடி பாரம்

ஆண் :
தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவை இல்லாத தாபம்

பெண் :
தனிமையே போ....இனிமையே வா.....
நீரும் வேரும் சேர வேண்டும்.

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு

~~@@~~ பின்னிசை ~~@@~~ 

ஆண் : 
காவலில் நிலைகொள்ளாமல் தாவிடும் மனது

பெண் :
காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆண் :
ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்

பெண் :
என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்

ஆண் :
விரகமே ஓர் .... நரகமோ சொல் 
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பெண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூ பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா...வா...வா.....

ஆண் :
பனி விழும் இரவு நனைந்தது நிலவு ..... 

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: